நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கும்
முப்படை, பொலிஸார் உட்பட சுகாதார சேவையினருக்கு தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க, 108 நாள்கள் விரதமிருந்த ஒருவர், தனது நேர்த்தியை நிறைவு செய்யும் வகையில், தலை முடியைக் காணிக்கை செய்துள்ளார்.
யாழ்ப்பாணம், கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி நடராசா (81 வயது) ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தலை முடியைக் காணிக்கை செய்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து முப்படையினர் , சுகாதார சேவையினர் பாதுகாப்பு பெற வேண்டும் என தலைமுடி காணிக்கை.
Reviewed by Madawala News
on
July 14, 2020
Rating: