பிணை முறை மோசடி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு
தெரிந்தே இடம்பெற்றதொன்றாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தமைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சிலரே காரணம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, பிணை முறை மோசடி தொடர்பில் உரிய வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட கிடைத்திருக்காது என சுனில் ஹந்துன்நெத்தி நேற்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார்.
பிணை முறை மோசடி, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு தெரிந்தே இடம்பெற்றது.
Reviewed by Madawala News
on
July 01, 2020
Rating: