(எம்.ஏ.றமீஸ்)
அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட
8 பேரை அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமாரின் உத்தரவில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டப்ளியூ என்.எஸ்.பி. விஜயதுங்கவின் வழிகாட்டுதலின், பெருங்குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையினலான குழுவினர் சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
சந்தேக நபர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்படும்போது, அவர்கள் புதையல் தோண்டுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையிலும் பூஜையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.
அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 8 பேர் கைது.
Reviewed by Madawala News
on
July 27, 2020
Rating: