போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் 4 பேர் ‘குடு’ விநியோகம் செய்த 10
வாகனங்கள் CID யினரால் மீட்க்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பாதாள உலக உறுப்பினர்கள் சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சிலர் போதை கடத்தலுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்த நிலையில் அப்பிரிவு அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் நிலையில் அவர்கள் நாடு முழுவதும் குடு விநியோகம் செய்த 10 வாகனங்கள் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
குறித்த நான்கு பேர் தவிர மற்றுமொறு பிரதான பொலிஸ் பரிசோதகரையும் தேடி சி ஐ டி வலை வீசியுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் கூறின.
போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் 4 பேர் ‘குடு’ விநியோகம் செய்த 10 வாகனங்கள் CID யினரால் மீட்பு
Reviewed by Madawala News
on
July 01, 2020
Rating: