அரச பாடசாலைகளில் தரம் 11ஆம், 12ஆம், 13ஆம் வகுப்புக்களுக்குரிய கல்வி நடவடிக்கைகள்
இன்று அரம்பமாகி காலை 7.30 தொடக்கம் பிற்பகல் 3.30 வரை கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் அதிபர்கள் நாளை முதல் (28) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) வரை தத்தமது பாடசாலைகளில் தங்கியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தக் காலப் பகுதியில், உதவித் தேர்தல் ஆணையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தரம் 11ஆம், 12ஆம், 13ஆம் வகுப்புக்களுக்குரிய கல்வி நடவடிக்கைகள் இன்று அரம்பமாகின.
Reviewed by Madawala News
on
July 27, 2020
Rating: