என் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எந்த இடத்திலும் எவருடனும் பகிரங்கமாக விவாதிக்கத் தயாராக இருக்கின்றேன்..
ஏ.சி.எம் பௌசுல் அலீம்
தேர்தலை காலம் கடத்துவதற்கு நான் மறைமுகமாகக் செய்யப்பட்டதாக தன் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது விடயத்தில் எந்த நேரத்திலும் பகிரங்க விவாதத்துக்கு தயாராக இருப்பதாகவும் நேற்று வலியுறுத்திக் கூறினார்.
நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்தார்.
அண்மைக்காலத்தில் சில ஊடகங்களிலும் அரசியல் தரப்பினரின் ஊடகச் சந்திப்புகளிலும் நான் விமர்சிக்க பட்டவை கண்ணுற்றேன். ஒரு தரப்புடன் மறைமுகமாக இணைந்து தேர்தலை காலம் கடத்துவதற்கு செயற்பட்டதாக என் மீது குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்தக் குற்றச்சாட்டுகளை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் விதிகளை மீறும் வகையில் நான் செய்யப்படவில்லை இந்தக் குற்றச்சாட்டுக்கள் மூலம் நான் அவமதிக்கப்பட்டு உள்ளேன். இதனையிட்டு நான் பெரிதும் கவலை கொண்டுள்ளேன்.
நான் எந்த அரசியல் கட்சியிலும் பின்புறத்திலும் இயங்கவில்லை நான் பொதுவானவன் எனது கடமை தேடுதலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதுதான்
தேர்தலை நடத்துவதற்கு உகந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவது தான் எனதும் ஆணைக்குழுவினதும் கடப்பாடாகும் நானோ ஆணைக்குழு இக்கடபாடலிருந்து ஒரு போதும் விலகி செயற்படவில்லை.
என் மீதான இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எந்த இடத்திலும் எவருடனும் பகிரங்கமாக விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
என் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எந்த இடத்திலும் எவருடனும் பகிரங்கமாக விவாதிக்கத் தயாராக இருக்கின்றேன்..
Reviewed by Madawala News
on
June 04, 2020
Rating: