நூதன முறையில் மறைத்து மூன்று கைத்தொலைபேசிகளை அங்குனுகொலபெலஸ்ஸ
சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயற்சித்த கைதியை கண்டுபிடித்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
உடலில் விஷத்தன்மை ஏற்பட்ட காரணத்தினால், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட கைதியே இவ்வாறு கைத்தொலைபேசிகளை ஆசன வாயிலில் வைத்து மறைத்து எடுத்துச் செல்ல முயறசித்துள்ளார்.
கைதி சிறைக்குள் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரது உடலில் செல்போன்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
தங்காலை பிரதேசத்தை சேர்ந்த இந்த கைதி குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.
மூன்று கைத் தொலைபேசிகளை ஆசன வாயில் வைத்து மறைத்து எடுத்துச் செல்ல முயற்சித்த கைதி .
Reviewed by Madawala News
on
June 03, 2020
Rating: