முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை தொகுதி அமைப்பாளராக நியமனம் .
எப்.முபாரக்
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் திருகோணமலை
தேர்தல் தொகுதிக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களினால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு நேற்று(28) மாலை கிண்ணியாவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது,நகர சபை உறுப்பினர் ஏ.எம்.மஹ்தீ அவர்கள் மூதூர் தொகுதிக்கான பிரச்சார செயலாளராகவும்,முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் சல்மான் பாரிஸ் குச்சவெளிக்கான மத்திய குழு தலைவராகவும் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி ,கிண்ணியா பிரதேச சபையின் பிரச்சார செயலாளராகவும் நியமனம் பெற்றனர்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை தொகுதி அமைப்பாளராக நியமனம் .
Reviewed by Madawala News
on
June 29, 2020
Rating: