(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (29) திங்கட்கிழமை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள பாடசாலைகளுக்கு இன்றைய தினம் அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மாத்திரம் சமூகமளித்தனர்.
அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாம் கட்டத்தில் மாணவர்கள் வரவழைக்கப்படவில்லை.
பாடசாலைக்கு வருகை தந்த அனைவரும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி சமூகமளித்தமை குறிப்பிடத்தக்கது.
அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் சமூகமளிப்புடன் பாடசாலைகள் இன்று ஆரம்பமானது.
Reviewed by Madawala News
on
June 29, 2020
Rating: