அஸ்ரப் ஏ சமத்
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை
என்று ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை.அன்று என்னோடு இருந்த முஸ்லிம்கள் அனைவரும் இன்றும் என்னோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வித அழுத்தங்கள் வந்தாலும் அவர்கள் என்னுடன் தான் இருக்கின்றனர்.ஆனால் தொடர்ந்து புரியாணி வட்டிலப்பம் கிடைத்து வந்தது போகப் போக அது கிடைக்காமல் குறைந்துவிடுமோ என்றுதான் என்னத் தேன்றுகின்றது.
மேற்கண்டவாறு தெகிவளை சகரான் மண்டபத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரவித்தார்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,
அன்று றிசாத் பதியுத்தீன் சொப்பிங் பேக்குடன் வடக்கில் இருந்து வந்தவர் இன்று லொறியுடன் செல்லும் அளவுக்கு வட கிழக்கு அமைதியான சுழநிலையை ஏற்படுத்தித்துக் கொடுத்தோம்.முதூர் வாழ்ந்த முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் 2 மணித்தியாளங்கள் விரட்டி கந்தளாய் துரத்திவிட்டார்கள்.
அன்று நாங்கள் முஸ்லிம்களிடம் சொன்னோம் “ஒரு கிழமைக்குள் உங்களை மீள முதூருக்கு குடியமர்த்தினோம் அதேபோல் புலிப் பயங்கரவாதிகளை துரத்தி மீளவும் மூதூரில் முஸ்லிம்களை குடியமர்த்தினோம்.
இப்பொழுது யாழ்ப்பாணம் தொட்டு கம்பாந்தோட்டை வரையிலான எந்தப் பிரதேசங்களுக்கும் மக்கள் எங்கும் அச்சமின்றி சென்று வரக்கூடிய சுழ்நிலையை நாங்கள் ஏற்படுத்தினோம். நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களுடன் சன்டையிடவில்லை.
புலிப்பயங்கரவாதிகளுடன சன்டையிட்டு பயங்கரவாதத்தினை அழித்து நா்ட்டில் சமாதானத்தினை ஏற்படுத்தினோம்.
கடந்த கால நல்லாட்சியில் நாட்டில் எவ்வித அபிவிருத்தியும் ஏற்படவில்லை. ஜனாதிபதி ஒரு பக்கம் இழுத்தடிப்பு பிரதமர் ரணில் ஒரு பக்கமென இழுத்தடிப்புக்கள் தான் நடைபெற்றன.ஆனால் நாட்டில் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை. இந்த நாட்டில் கோட்டாபாய ராஜபக்ச அவர்கள் வெற்றிவாகை கூடிய கட்சியில் இருந்துதான் என்னை பிரதமராகக் கொண்ட அரசாங்கம் ஏற்படுதல் வேண்டும்.
கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி தலைமையில் உலகில் எங்குமில்லாதவாறு பாதுகாப்புப்படையினர் பொலிஸார் மற்றும் சுகாதார அமைச்சும இனைந்து தான் இந்த கொடிய கோரோனா பயங்கர தொற்று நோயை அவர் வெற்றிகண்டார்.
அது ஏனைய நாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாக உள்ளது.அந்த எடுபிடியில் தான் முஸ்லிம்களது கோரோனா நோயளிகள் இறந்தவர்கள் உடலை புதைப்பதா அல்லது பற்றவைப்பதா என்ற பிரச்சினை எழுந்தது. இவ்விடயத்தினை ரவுக் கக்கீம் தான் சாடிப் பேசினார்.
அதன் பின்னர் அலி சப்றி தலைமையில் சில முஸ்லிம் குழு வொன்று இது பற்றி என்னைச் சந்தித்து. பேசனார்கள் அதனை நான் சுகாதார அமைச்சர் பவித்திரா வண்னியராச்சி மற்றும் வைத்திய அதிகாரிகள் விஞ்ஞானிகள் கூட்டி அவா்களது தகவல் அறிக்கையின் படியே அது நடைபெற்றது. அவா்கள் பற்றவைப்பதனையே சொல்லியருந்தார்கள்.
அதனை மீறி அரசியல் ரீதியாக நாங்கள் அவ்விடயத்தில் கையடிக்கவில்லை.கோரோனா ப்ற்றி மிகவும் கட்டுபாடாக .இருந்தமையில் தான்நாம் தற்போது அந் நோயில் இருந்து தப்பியுள்ளோம்.நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் சனங்கள் பழைய முறைப்படி நெறிசலாக நிறம்பி வாழ்ந்திருந்தார்லள். அவைகள் மீள சனக் கூடுவதை தவ கொள்வது நல்லது.
இந்த நாட்டினை ஜனாதிபதியின் 5 வருடங்களுக்குள் நல்லதொரு சமுதாயத்தினை கட்டியெழுப்பி சகலரும் வாழக்கூடிய நிலைமைக்கு கொண்டுவருதல் வேண்டும்.
ஆகவே தான் நமது எதிர்கால சிறார்களுக்கு சிறந்த பிரஜைகளாக வருவதற்கு வழிவகுத்தல் வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவினை விட கோட்டபாய ராஜபக்ச மிகவும் கடுமையானாவர் அவர் இந்த நாட்டினை சிறந்த நாடாக கொண்டு வருவார் என நம்புகின்றோம். எமது கட்சியில் முஸ்லிம் வேட்பாளர்கள் 8 பேர் உள்ளனர்.
அவர்களது வெற்றிக்கு நீங்கள் இம்முறை கூடுதலாக உழைத்தல் வேண்டும். ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தேசிய பட்டியலில் உள்ளார். அவர் எம்முடனை இனைந்து நாட்டுக்காக சேவையாற்றுவார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச அவா்கள் குறிப்பிட்டார்.
முஸ்லிம் பொதுஜன பெரமுன முன்னணியின் தேசிய தலைவர் அலி சப்றி அதன் தேசிய அமைப்பாளர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் , முன்னாள் அமைச்சர்கள் பைசர் முஸ்தபா ,சுசில் பிரேம் ஜயந்த,காமினி லெக்குகே,பேராசிரியர் ஜீ.எல் பீறிஸ் ஆகியோறும் இங்கு உரையாற்றினர்
அத்துடன் வடகிழக்கு உட்பட பல்வேறு பிரதேச முஸ்லிம் உறுப்பினர்கள் தமது பிரச்சினைகளை அலி சப்றி மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் கலந்துரையாடினார்கள்.
அன்று என்னோடு இருந்த முஸ்லிம்கள் அனைவரும் இன்றும் என்னோடு உள்ளார்கள்
Reviewed by Madawala News
on
June 29, 2020
Rating: