கட்சியிலிருந்தோ மேயர் பதவியிலிருந்தோ என்னை யாராலும் நீக்க முடியாது.




எம்.ஆர்.எம்.வஸீம்
கட்சியிலிருந்தோ மேயர் பதவியிலிருந்தோ என்னை யாராலும் நீக்க முடியாது. அவ்வாறானதொரு தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளவும் இல்லை என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் ஒரு சிலரின் நடவடிக்கையால் கட்சி அரசியலில் விரக்தியுற்றிருக்கின்றேன். அதனால் அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் தீர்மானித்திருக்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தோ கொழும்பு மாநகர சபை மேயர் பதவியில் இருந்தோ என்னை யாராலும் நீக்க முடியாது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவோ கட்சியோ அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை. ஒருசில சமூக வலைத்தலங்களே இது தொடர்பான பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றன.

அத்துடன் கடந்த முதலாம் திகதி கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டே எனக்கு எதிரான பொய் செய்தி பரப்பப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியிலிருந்தோ மேயர் பதவியிலிருந்தோ என்னை யாராலும் நீக்க முடியாது. கட்சியிலிருந்தோ மேயர் பதவியிலிருந்தோ என்னை யாராலும் நீக்க முடியாது. Reviewed by Madawala News on June 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.