அட்டன் பிராந்திய ஊடகவியலாளர் .கிரிஷாந்தனுக்கு கொரோனா
தொற்று இல்லையென்பது
பி சி ஆர் பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலை வைத்திய அதிகாரி சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இவர் இருமல் காரணமாக மருந்து பெற சென்ற சமயம் அவருக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடாக பி சி ஆர் பரிசோதனை நேற்று செய்யப்பட்டது.
ஆனால் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த
இ தொ கா தலைவரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டதால் மக்கள் கூட்டத்திலிருந்து கொரோனா தொற்றியிருக்கலாமென செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் இன்றைய பரிசோதனை முடிவுகள் மூலம் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதியாகியுள்ளது.
Siva Ramasami
கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதியானது.
Reviewed by Madawala News
on
June 03, 2020
Rating: