கடந்த ஆட்சியின் தோல்விகளால் மக்கள் தமது அரசாங்கத்தை நிராகரித்ததாக ஐக்கிய தேசியக்
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்திலான பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“அரசாங்கத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதே தமது இலக்காக இருக்கின்றது. கொரோனா தொற்றிலிருந்து நாட்டை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவினை வழங்குவோம்.
ஏனெனில் அது சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அரசுடன் இரகசிய தொடர்பினை பேணுவதாக சிலர் போலி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
இதேவேளை, கடந்த ஆட்சியின் தோல்விகளாலேயே மக்கள் தமது அரசாங்கத்தை நிராகரித்ததாக ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதே எமது இலக்கு
Reviewed by Madawala News
on
June 29, 2020
Rating: