நீரில் மூழ்கி இளைஞன் ( பெளசுல் பாஹிம் - 17 வயது) உயிரிழப்பு.



(எச்.எம்.எம்.பர்ஸான்)
நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்த
 சம்பவமொன்று இன்று (28) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை – புளியடித் துறை எனும் இடத்திற்கு குடும்பத்தோடு சென்ற இளைஞன் ஆற்றில் நீராடும் போது நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

மிக நீண்ட நேரத்திற்குப் பின்னர் ஆற்றிலிருந்து இளைஞனின் உடல் மீட்கப்பட்டது.

வாழைச்சேனை – செம்மண்ணோடையைச் சேர்ந்த பதினேழு வயதுடைய பெளசுல் பாஹிம் என்பவரே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த குறித்த இளைஞனின் உடல் பிரதே பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீரில் மூழ்கி இளைஞன் ( பெளசுல் பாஹிம் - 17 வயது) உயிரிழப்பு. நீரில் மூழ்கி இளைஞன் ( பெளசுல் பாஹிம் - 17 வயது) உயிரிழப்பு. Reviewed by Madawala News on June 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.