மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென்
மாகாணங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் குறிப்பாக நுவரேலியா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டிற்கு மேலாக மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60_65 km வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.
ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுககு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி , ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் தற்காலிகமாக மணித்தியாலத்திற்கு 70_80 km வேகத்தில் காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
சிரேஷ்ட வானிலை அதிகாரி
தேசமானிய
மொஹமட் சாலிஹீன்.
அம்பfன் சூறாவளியின் தாக்கம் இன்று முதல் படிப்படியாக குறைவடைகின்றது .
Reviewed by Madawala News
on
May 21, 2020
Rating: