இலங்கையின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் திட்டம் இடை நிறுத்தப்பட்டது - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.
இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும்
முன்னாள் நிர்வாகிகள் உடனான கலந்துரையாடல் ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நடத்தியதை தொடர்ந்து புதிய சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டம் நிறுத்தப்பட்டது.
"ஹோமகமவில் உத்தேச புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் திட்டத்தை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பாடசாலை கிரிக்கெட் மற்றும் மைதான அரங்கங்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதியை பாவிக்க பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் திட்டம் இடை நிறுத்தப்பட்டது - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.
Reviewed by Madawala News
on
May 21, 2020
Rating: