எதிர்வரும் 26 திகதி செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல்வரை தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமைக்குப் பின்னர் கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
நாளையும் நாளை மறுதினம் திங்கட்கிழமையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும் அதேவேளை செவ்வாய் காலை தளர்த்தப்படும்.
ஊரடங்கு தொடர்பில் முக்கிய அறிவிப்பு
Reviewed by Madawala News
on
May 23, 2020
Rating: