குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை
மங்கிபிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பயாகலையை சேர்ந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
களுத்துறை – பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று அதிகாலை திடீரென சுகயீனமுற்ற இவரை இராணுவம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது இந்த உயிரிழப்பு நடந்துள்ளதாக சீனக்குடா பொலிசாருக்கு இராணுவம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இவருடன் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்கள் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று காத்தான்குடி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Siva ramasami
குவைத்திலிருந்து திரும்பிய பெண் திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
May 25, 2020
Rating: