பாகிஸ்தான் விமான விபத்து... 7 பேர் வரை உயிர் பிழைத்துள்ளதாக தகவல்.


பாகிஸ்தான் விமான விபத்தில்  7 பேர் வரை உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



கராச்சியில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 7 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

91 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் ஏர்பஸ் A 320 விமானம் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது விமானம்   நகரின் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில்  தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதாகவும்,  அதனால்  விமான நிலையத்திலிருந்து சில மைல் தொலைவில் உள்ள  காலனி பகுதியில் உள்ள வீடுகளில் மோதியதற்கு முன் இரண்டு அல்லது மூன்று முறை தரையிறங்க முயற்சித்ததாகவும் சாட்சிகள் தெரிவித்தனர்.

பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகர்  இதுவரை ஏழு பேர் தப்பியுள்ளனர் என்று ஊடகங்களுக்கு  கூறினார்.

தப்பிப்பிழைத்தவர்களில் ஒருவர் பஞ்சாப் வங்கியின் தலைவர் ஜாபர் மசூத் என்று பாகிஸ்தான் அரச துறையை சேர்ந்த   ஒருவர்  தெரிவித்தார்.

பாகிஸ்தான் விமான விபத்து... 7 பேர் வரை உயிர் பிழைத்துள்ளதாக தகவல். பாகிஸ்தான் விமான விபத்து... 7 பேர் வரை உயிர் பிழைத்துள்ளதாக தகவல். Reviewed by Madawala News on May 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.