நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 21 பேரில் 19 பேர் கடற்படையினர்!



நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 21 பெயரில் 19 பேர் கடற்படையைச்
சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் துபாயில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனவும் இராணுவப் பேச்சாளர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1089 ஆக  அதிகரித்துள்ளது. 

இதுவரை 660 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும் 420 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 21 பேரில் 19 பேர் கடற்படையினர்! நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 21 பேரில் 19 பேர் கடற்படையினர்! Reviewed by Madawala News on May 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.