ஹஸ்பர் ஏ ஹலீம்_
எதிர்வரும் வாரம் மிகுந்த அவதானம் மிக்க காலமாக இருப்பதனால் மக்கள் அரசாங்கம்
மற்றும சுகாதாரத்துறை விடுக்கும் அறிவுறுத்தல்களை கூடிய கரிசனையுடன் பின்பற்றுமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
பிரதேச செயலாளர்களுடனான நேரடி காணொளி மூலமான விசேட கலந்துரையாடலை மாவட்ட அரசாங்க அதிபர் இன்று(03) மேற்கொண்டதுடன் பிரதேச செயலக ரீதியாக மக்கள் ஊரடங்கு சட்டம் நிலவுகின்ற போதும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்துமாறும் சில பிரதேசங்களில் மக்கள் பொறுப்பற்ற தன்மையோடு வெளியில்வந்து நடமாடுவதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இச்செயற்பாடு இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆரோக்கியமாக அமையாது என்றும் தெரிவித்தார்.
ஊரடங்கு அமுல்படுத்தப்படும்போது பிரதேச செயலக ரீதியாக நடமாடும வாகனங்கள் மூலம் அத்தியவசிய உணவுப்பொருட்களின் விற்பனை வீடு நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அத்துடன் விவசாய மீன்பிடி நடவடிக்கைகள்,அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கொடுப்பனவுகள் உட்பட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.
இதுவரை திருகோணமலை மாவட்டம் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்கின்றது.இதனை தொடராக பாதுகாக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.அத்துடன் கடமைகளை நிறைவேற்றும்போது தமது பாதுகாப்பையும் தம் ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.தத்தம் பிரிவுகளிள் மக்களுக்கு அவசியமான உணவுப்பொருள் இருப்பை பேண உரிய பிரதேசத்தில் உள்ள பல நோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் மற்றும் வர்த்ததகர்களுக்கு அறிவுறுத்துமாறும் அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரம் வாகன அனுமதிபத்திரங்களை மக்களுக்கு வழங்குமாறு இதன்போது அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களை வேண்டிக்கொண்டதுடன் மக்கள் வழங்கப்படும்
அத்தியவசிய வாகன அனுமதிப்பத்திரங்களை முறைதவறி உபயோகிக்க வேண்டாம் என்றும் அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டார்.
இந்த விசேட நேரடி காணொளி உரையாடலில் திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும அனைத்து பிரதேச செயலாளர்களும் இணைந்திருந்தனர்.
எதிர் வரும் வாரங்களில் மக்கள் அவதானத்துடன் செயற்படவும்.
Reviewed by Madawala News
on
April 04, 2020
Rating: