மருதானை நபர் கொரோனாவால் உயிரிழந்த நிகழ்வு அப்டேட்ஸ்...


கொரோனாவால் நேற்றிரவு உயிரிழந்த மருதானை நபரின்  வீட்டார்
 அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.

அவர் வசித்த மருதானை போர்பஸ் ஒழுங்கை பகுதிகளில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப்பகுதியில் உள்ள சில வீடுகளில் உள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஐ.டி .எச். வைத்தியசாலையில் மரணமாகியவரின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

இதேவேளை கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படத்தான் வேண்டும் என உத்தரவிட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசிங்க, சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

01 ஏப்ரல் 2020 எனும் நேற்றைய திகதியிடப்பட்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவின் கையெழுத்துடன், இந்த சுற்று நிருபம் வெளியாகியுள்ளது.


இதேவேளை கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா வை புதைப்பது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
Siva Ramasami

மருதானை நபர் கொரோனாவால் உயிரிழந்த நிகழ்வு அப்டேட்ஸ்...  மருதானை நபர் கொரோனாவால் உயிரிழந்த நிகழ்வு அப்டேட்ஸ்... Reviewed by Madawala News on April 02, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.