அரண்மனை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா !! மலேசிய மன்னரும் அவரது துணைவியாரும் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொண்டனர்..
மலேசிய மாமன்னரும் அவர்தம் துணைவியாரும் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இத்தகவலை அரண்மனை வட்டாரம் இன்று தெரிவித்தது.
அரண்மனை ஊழியர்கள் 7 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனை மூலம் இது உறுதியான நிலையில், மாமன்னர் தம்பதியர்க்கும் உரிய பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக அரண்மனைக் கட்டுப்பாட்டாளர் அகமட் படேல் சம்சுதீன் தெரிவித்துள்ளார்.
எனினும் பரிசோதனையின் முடிவில் மாமன்ன தம்பதியர்க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இத்தகவலை அறிந்தபோதும் மாமன்னர் தம்பதியர் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அகமட் படேல் சம்சுதின் மேலும் தெரிவித்தார்.
அரண்மனை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா !! மலேசிய மன்னரும் அவரது துணைவியாரும் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொண்டனர்..
Reviewed by Madawala News
on
March 26, 2020
Rating: