கொரோனா வைரஸை அடுத்து சீனாவில் ஹன்டா வைரஸ்... ஒருவர் பலி.


உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் இருக்கும்போது சீனாவில்
 மீண்டும் ஹன்டா வைரஸ் தொற்று அச்சம்  எழுந்துள்ளது.

உலகமே கொரோனா  வைரஸ் அச்சத்தால் முடங்கியுள்ளது. பல நாடுகள் ஊரடங்கு சட்டத்தை அமுல் படுத்தி மக்களை வீடுகளுக்குள் அடைத்து வைத்துள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் முதலில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது.  பின்னர் சுதாரித்து மக்களுக்கு நல்ல முறையில் மருத்துவ சிகிச்சை அளித்து பலரையும் மீட்டது.

சீனாவில் தற்போது இந்த தொற்றின் பாதிப்பு குறைந்திருக்கும் நிலையில், மற்ற உலக நாடுகளை மரணத்தின் பீதியில் வைத்துள்ளது. மக்கள் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்ற பயத்தில் உறைந்துள்ளனர்.


இந்த நிலையில், சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கும்போது, ஒருவர் இறந்தார். இவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. 


இதையடுத்து அந்த பஸ்ஸில் பயணித்த 32 பேரையும் மருத்துவர்கள் சோதித்தனர்.


இந்த வைரஸ் தற்போது பிரான்சிலும் பரவி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

பிரான்சில் இருக்கும் நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அங்கு இருக்கும், ஓட்டல்கள், பார்கள், கிளப்புகள் மூடப்பட்டன.

நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் இருந்து மற்ற இடங்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எலியைத் தாக்கும் இந்த வைரஸ் விலங்குகளைத் தாக்காது. மனிதனை தாக்கும். எலியின் சிறுநீர், எச்சில், மலம் ஆகியவற்றின் வழியாக மனிதர்களுக்கு பரவும்.

ஹன்டா வைரஸ் தாக்குதலும் புளூ காய்ச்சலைப் போன்றதே. துவக்கத்தில் இதன் அறிகுறியாக காய்ச்சல், குளிர், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிவயிறு வலி இருக்கும்.

இந்த வைரஸ் தாக்குதலை ஆரம்பித்தில் கண்டுபிடிப்பது கடினம். பத்து நாட்களுக்குப் பின்னரே தெரிய வரும். இந்த வைரசும் முதலில் நுரையீரலைத் தாக்கும். பின்னர் ரத்த நாளங்களுக்குள் செல்லும். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இந்த வைரஸ் பரவாது.

தற்போது இந்த வைரஸ் தாக்குதலும் சீனாவுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. இது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவாது என்ற நிம்மதி இருந்தாலும், எலி போன்ற சந்துக்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். வீட்டின் சுற்றுப் புறங்களையும் பாதுகாக்க வேண்டும்.

சிலி, அர்ஜென்டினா போன்ற நாடுகளில் மிகவும் அரிதாக இந்த வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவியுள்ளது. அதற்கு ஹன்டா வைரசில் இருந்து மாறுபடும் ஏன்டிஸ் வைரஸ் (Andes Virus) என்று அழைக்கப்படுகிறது.
கொரோனா வைரஸை அடுத்து சீனாவில் ஹன்டா வைரஸ்... ஒருவர் பலி. கொரோனா வைரஸை அடுத்து சீனாவில் ஹன்டா வைரஸ்... ஒருவர் பலி.  Reviewed by Madawala News on March 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.