இத்தாலி முதியோர் காப்பகம் ஒன்றில்
தங்கியிருந்த 70 வயதான இலங்கையர் ஒருவர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டின் சிசிலி தீவின் மேலிசா பிரதேசத்தில் வசித்து வந்த இலங்கையரே மருத்துவ சிகிச்சைகள் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப் பட்டாலும் அதனை இன்னும் உறுதி செய்யவில்லை என வும்,
இத்தாலியில் உள்ள மருத்துவமனைகள் இன்னும் அதனை உறுதிப்படுத்தவில்லை என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இத்தாலியின் ரோம் நகரில் உள்ள இலங்கை தூதரகமும் விசாரணை நடத்தியுள்ளது, இருப்பினும் மரணம் ஏற்பட்ட காரணம் தொடர்பாக இன்னும் உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை.
அதேவேளை,
இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இலங்கையர் ஒருவர் இத்தாலியில் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
March 25, 2020
Rating: