ஸ்பெயினில் ஒரே நாளில் 514 பேர் பலி !



கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மிக மோசமான பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில்
கடந்த 24 மணித்தியாளங்களில் 514 பேர் பலியாகியுள்ளனர்.

இதனை அடுத்து அங்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2696 ஆக உயர்ந்துள்ளது. 

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட பின்னர் பதிவான உச்ச பலி எண்ணிக்கை இதுவென அந்த நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அங்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு நூற்றுக்கணக்கில் மக்கள் பலியாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

ஒரே  நாளில் 6584 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு சுமார் 40000 பேர் வரை மொத்தம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் ஒரே நாளில் 514 பேர் பலி ! ஸ்பெயினில் ஒரே நாளில் 514 பேர் பலி ! Reviewed by Madawala News on March 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.