சட்டத்தினை மீறி செயற்பட்ட மேலும் நான்கு பேர் கைது
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தினை மீறி செயற்பட்ட நான்கு பேர் நேற்று (29) மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
ஊரடங்கு சட்டத்தினை மீறி செயற்பட்ட 4 பேர் கைது. #கந்தளாயில்
Reviewed by Madawala News
on
March 30, 2020
Rating: