Corona வைரஸ்
பரவலை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தால் பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.
அதில் முக்கியமான நடவடிக்கையாக இலங்கை முழுதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
வெள்ளி மாலை 6 மணி முதல் தற்போது வரையான காலகட்டத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 3700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதை மற்றும் பொது இடங்களில் சுற்றி திரிந்தவர்கள், வாகனங்களில் சென்றவர்கள் என இவர்களில் அடங்குவர்.
குறிப்பிட்ட நபர்களிடமிருந்து 715 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஊரடங்கு சட்டத்தை மீறிய 3700 பேர் இதுவரை கைது, 715 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Reviewed by Madawala News
on
March 25, 2020
Rating: