கொழும்பு 07 ல் அமைந்துள்ள தெவட்டகா பள்ளிவாசலில் இன்று
வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னா் சீன நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைய வேண்டி விசேட துஆப் பிராத்தனை இடம் பெற்றது.
இவ் வைபவத்தினை இலங்கை -சீன ஊடக சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பு -7 தெவட்டகா பள்ளி்த் தலைவா் றியாஸ் சாலி ஏற்பாடு செய்திருந்தாா்.
இந் நிகழ்வில் கொழும்பில் உள்ள சீன துாதரகத்தின் லு சங் கலா்சார மற்றும் அரசியல் விவகார பணிப்பாளா் கலந்து கொண்டாா்.
கோரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைய வேண்டி ஜும்மாவின் பின் விசேட துஆ பிரார்த்தனை.
Reviewed by Madawala News
on
February 14, 2020
Rating: