ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
பஸ்ஸில் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பாடலை ஒலிபரப்பியது மற்றும்
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தில் பஸ்ஸை செலுத்திய குற்றச்சாட்டில் குறித்த தனியார் பஸ்ஸின் சாரதியொருவருக்கு 32,500 ரூபா அபராதம் விதிப்பதாக காலி நீதிமன்ற நீதிபதி பவித்ரா சன்ஜீவனி பத்திரனி உத்தரவிடடுள்ளார்.
அத்தோடு பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியையும் பறிமுதல் செய்மாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதிக சத்தத்துடன் பாடல் ஒலித்தமைக்காக 7,500 ரூபாய் அபராதமும், காலாவதியான அனுமதி பத்திரத்தை வைத்திருந்தமைக்காக 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பஸ்ஸினுல் அதிக சத்தத்துடன் பாடல் ஒலித்தற்கு சாரதிக்கு அபராதம்!
Reviewed by Madawala News
on
February 13, 2020
Rating: