அம்பாறை மாவட்டதில் கடலில் ஏற்பட்டுள்ள திடிர் மாற்றம் - மீன்பிடியும் குறைவு.


-பாறுக் ஷிஹான் -
அம்பாறை மாவட்டதில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக
  கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளது .

கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை  ந்டர்த்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான  கடந்த சில வாரங்களாக கரயோர பிரதேசத்தில் வீசிவரும் காற்றின் வேகத்தின் அதிகரிப்பினாலும் இ நீரோட்டத்தின் தன்மையில்   ஏற்பட்டுள்ள  மாற்றத்தினாலும்  மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனாலும் இ தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாக குறிப்பிடுகின்றனர். மீன்பிடியை நம்பி வாழ்வை நடார்திவரும் மீனவ்ர்கள் மீன்பிடி குறைந்த்துள்ள காரணத்தால் மூலதனத்தை செலவுசெய்து கடலுக்கு சென்று வெறும் கையோடு வீடு செல்ல நேரிடுவதாக குறிப்பிட்டனர்.
அம்பாறை மாவட்டதில் கடலில் ஏற்பட்டுள்ள திடிர் மாற்றம் - மீன்பிடியும் குறைவு. அம்பாறை மாவட்டதில் கடலில் ஏற்பட்டுள்ள திடிர் மாற்றம் - மீன்பிடியும்  குறைவு. Reviewed by Madawala News on February 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.