மழை தற்காலிகமாக அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அத்துடன்
ஹம்பாந்தோட்டை, பொலனறுவை,
மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடைக்கிடையே
மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்தின் சில
இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
பதுளை, மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களில் 50mm
இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பதிவாகலாம்.
ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை, நுவரேலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40km வேகத்தில் இடைக்கிடையே காற்று
வீசும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல்
பிராந்தியங்களில் இடைக்கிடையே
மழை பெய்யக்கூடும்.
கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில்
பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30_40 km வேகத்தில் வடகிழக்குத் திசையில்
இருந்து காற்று வீசும்.
காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான அத்துடன் மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50_55 km வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
சிரேஸ்ட வானிலை அதிகாரி
தேசமானிய
மொஹமட் சாலிஹீன்.
நாளை மாலை முதல் சில தினங்களுக்கு காற்றுடன் கூடிய மழை..
Reviewed by Madawala News
on
February 19, 2020
Rating: