தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக தான் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து
செயற்பட தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குமார வெல்கம இதன்போது சுட்டிக்காட்டினார்.
தாம் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் குமார வெல்கம மேலும் தெரிவித்தார். இருப்பினும் இதுவரையில் தனக்கு 5 பிரதான கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாகவம் அவர் குறிப்பிட்டார்.
தான் உருவாக்கவுள்ள புதிய கட்சியின் செயற்பாடுகள் தோல்வியுறும் பட்சத்தில் என்னை அழைத்த 5 கட்சிகளில் ஒரு கட்சிக்கு தலைமை ஏற்று வழிநடத்தவுள்ளதாகவும் வெல்கம குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சி ஆகியன நாட்டுக்குள் இல்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக தான் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்பட தயார்.
Reviewed by Madawala News
on
February 20, 2020
Rating: