கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று முற்றுகை... ஆயிரத்துக்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் கைப்பற்றல் .
வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுபகுதியில் கஞ்சாசெடிகள் பயிரிடப்பட்ட
தோட்டம் ஒன்று விசேட அதிரடி படையினரால் நேற்று (12) முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது அரை ஏக்கர் அளவிலான குறுகிய நாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை விசேட அதிரடிபடையினர் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் போகஸ்வெவ பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று முற்றுகை... ஆயிரத்துக்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் கைப்பற்றல் .
Reviewed by Madawala News
on
February 13, 2020
Rating: