தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் பாலகிருஷ்னா என்ற 50 வயது நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பான பல வீடியோக்களை சமூக வலைதங்களில் பார்த்து வந்துள்ள பாலகிருஷ்ணா என்ற இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் தனக்கு ஏற்பட்டிருந்த சாதாரண வைரஸ் காய்ச்சாலை கொரோனா என என்னி தன் குடும்பத்தினருக்கு பரவாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த நபரை முன்னதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல் என ஊர்ஜிதம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தில் பாலகிருஷ்னா என்ற நபர் தற்கொலை !!
Reviewed by Madawala News
on
February 12, 2020
Rating: