‘சந்த் தாரா’ மந்திரத்தை உச்சரித்தால், கொரோனா வைரஸ் வராது; எளிதாக நோயை கட்டுப்படுத்தலாம் என திபெத்திய புத்தமத தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் பல நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சீனாவின் சில புத்த துறவிகள் இந்த நோயை கட்டுப்படுத்த ஏதேனும் வழிமுறை உள்ளதா என தர்மசாலாவில் உள்ள புத்தமத தலைவர் தலாய்லாமாவிற்கு பேஸ்புக் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதனை ஏற்று, இந்த வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள், ‘ஓம் தரே துத்தாரே துரே சோஹா ‘ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால் பதற்றத்தில் இருந்து விடுபட்டு மனஅமைதி பெறலாம். அந்த மந்திரத்தை தொடர்ந்து நம்பிக்கையுடன் உச்சரித்து வந்தால் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தலாய்லாமா கூறியுள்ளார்.