உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணைகளில் 80% நிறைவு பெற்றுவிட்டன.


உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் தொடர்பில் மேற்­கொள்­ளப்­படும் விசா­ர­ணை­களில் 80% நட­வ­டிக்­கைகள் நிறை­வ­டைந்­துள்­ள­தா­கவும்,
மிக விரைவில் விசா­ர­ணை­களை நிறைவு செய்­து­சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக சட்ட மா அதி­ப­ருக்கு குறித்த விசா­ரணை அறிக்­கையை முன்­வைக்க எதிர்­பார்த்­துள்­ள­தாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரி­வித்­துள்ளார்.


இதே­வேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­தாகக் கூறப்­படும் மாலை­தீவு பிர­ஜைகள் நால்வர் தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.


இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தில் ஈர்க்­கப்­பட்­டுள்ள அப்­பாவி இஸ்­லா­மிய இளை­ஞர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்த இந்­தி­யாவில் சிறப்புப் பயிற்­சி­பெற்ற குழு­வி­னரால் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

இலங்­கையில் இஸ்­லா­மிய மற்றும் ஏனைய மத அடிப்­ப­டை­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட வன்­மு­றைகள், தாக்­கு­தல்கள் எதிர்­கா­லத்தில் நிக­ழாமல் இருப்­ப­தற்­கான திட்­டங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்று ஒரு வருடம் பூர்த்­தி­யா­க­வுள்ள நிலையில். நிறை­வு­பெற்ற 10 மாத காலத்தில் இலங்கை பொலிஸார், குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்த விசா­ரணை நட­வ­டிக்­கை­களின் முன்­னேற்­ற­க­ரத்­தன்மை தொடர்பில் தெளி­வுப்­ப­டுத்தும் ஊடக சந்­திப்பு நேற்று பொலிஸ் தலைமைக் காரி­யா­ல­யத்தில் இடம் பெற்­றது.

இந்த ஊடக பிரிவில் கலந்­து­கொண்டு தெளி­வு­ப­டுத்­து­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இந்த ஊடக சந்­திப்பில் பொலிஸ் ஊடகப் பணிப்­பாளர் ஜாலிய சேனா­ரத்ன, குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெத­ராட்சி ஆகியோர் கலந்துக் கொண்­டனர்.

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்று ஒரு வருட காலம் பூர்த்­தி­யா­க­வுள்­ளது. மூன்று வழி­பாட்டுத் தலங்கள், 3 நட்­சத்­திர ஹோட்­டல்கள், மேலும் 2 இடங்­களில் அடிப்­ப­டை­வா­திகள் தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளாக மாறி தாக்­கு­தல்­களை குறு­கிய நேரத்­துக்குள் நடத்­தி­யி­ருந்­தனர். இந்தத் தாக்­கு­த­லினால் 300 க்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­த­துடன் 590 பேர் காய­ம­டைந்­தனர்.

குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் குற்­றத்­த­டுப்புப் பிரி­வினர், பொலிஸார் துரி­த­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தார்கள். இத­ன­டிப்­ப­டையில் குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் 216 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களில் 7 பேர் பெண்கள். 216 பேரில் 153 பேர் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வுக்­க­மைய தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பான ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கும், தொழில்­நுட்ப வச­தி­களை விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­து­வ­தற்கும் சர்­வ­தேச பொலிஸார், ஐக்­கிய அரபு இராஜ்­ஜிய விசா­ரணைப் பிரிவு, அவுஸ்­ரே­லி­யாவின் பெடரல் தொடர்பு, இலங்­கையின் தட­ய­வியல் துறைசார் நிபு­ணர்கள், உள்­ளிட்ட பல்­த­ரப்புத் துறைசார் நிபு­ணர்­களின் ஆத­ர­வுடன் விசா­ரணை நட­வ­டிக்கைள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.


பயங்­க­ர­வாதி ஸஹ்­ரா­னுடன் நேரடி மற்றும் மறை­முக தொடர்பைக் கொண்­டுள்­ள­தாக சந்­தே­கத்தின் பேரில் சர்­வ­தேச பொலி­ஸாரின் உத­வி­யுடன் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தி­லி­ருந்து 6 இலங்­கை­யர்கள் கைது செய்­யப்­பட்டு இலங்­கைக்கு நாடு கடத்­தப்­பட்­டுள்­ளார்கள்.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை போதிக்கும் விதத்தில் செயற்­பட்­டுள்­ளார்கள் என்ற அடிப்­ப­டையில் 4 மாலை­தீவு பிர­ஜைகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இவர்­களில் இரு­வரின் ஆவ­ணங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் மிகுதி இருவர் தொடர்­பான விசா­ரணை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளி­னதும், சந்­தே­கத்தின் பெயரில் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளி­னதும் 3000க்கும் அதி­க­மான தொலை­பேசி உரை­யா­டல்கள் பரி­சீ­லனை செய்­யப்­பட்­டுள்­ளன. இணையம் மூலம் மேற்­கொள்ளும் உரை­யா­டல்கள் தொடர்பில் ஆராய ஏஎப்பி, மற்றும் எப்.பி. ஐ ஆகிய நிறு­வ­னங்­களின் உத­வியும் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.


குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணை­களின் போது தனிப்­பட்ட சாட்­சியம், விஞ்­ஞான தொழில்­நுட்ப சாட்­சியம் உள்­ளிட்ட விட­யங்­க­ளுக்கு அதிக கவனம் செலுத்­தப்­பட்­டன. வண்­ணாத்­து­வில்லு பிர­தே­சத்தில் கைப்­பற்­றப்­பட்ட வெடி­பொ­ருட்கள், மாவ­னெல்லை பிர­தே­சத்தில் புத்தர் சிலைகள் உடைப்பு உள்­ளிட்ட இரு சம்­ப­வங்­களும் ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­த­லுடன் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­டுள்­ளன என்­பது இது­வ­ரை­யான விசா­ர­ணை­களின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.


மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு திட்­ட­மி­டப்­பட்ட வகையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சம்­ப­வ­மாகும். இந்தச் சம்­ப­வத்தில் தொடர்­பு­டை­ய­தாக கைது செய்­யப்­பட்ட 42 பேரில், 21 பேர் ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­தலின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யான பயங்­க­ர­வாதி ஸஹ்­ரா­னுடன் பல்­வேறு விட­யங்­க­ளுடன் தொடர்பு கொண்­டுள்­ளார்கள்.


தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளி­னதும் அவர்­களின் உற­வி­னர்­க­ளது உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு வங்­கிக்­க­ணக்­குகள் , அசையும் மற்றும் அசையா சொத்­துக்கள் பரி­சீ­லிக்­கப்­பட்டு நீதி­மன்­றத்தின் அனு­ம­தி­யுடன் வங்­கிக்­க­ணக்­கு­களின் செயற்­பா­டுகள் இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்­ள­துடன், அசையா சொத்­துக்­களும் முடக்­கப்­பட்­டுள்­ளன.


குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து டி- 56 ரக துப்­பாக்கி 3, மைக்ரோ துப்­பாக்கி 1, ரிவோல்வர், 55,20000 ரூபா பணம், 23,500 அமெ­ரிக்க டொலர்கள்,19 பவுண் தங்கம், 113 ஸ்மார்ட் கைய­டக்­கத்­தொ­லை­பே­சிகள், 22 கணி­னிகள், 29 மடிக்­க­ணி­னிகள், 01 ஐ-பேட், 02 மோட்டார் கார், 01 முச்­சக்­கர வண்டி, 01 மோட்டார் சைக்கிள் உள்­ளிட்­டவை இது­வ­ரையில் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.


உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம், மற்றும் பயங்­க­ர­வாத ஒழிப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வினர் 11 விசேட குழு­வாகப் பிரிந்து பல்­வே­று­பட்ட விதத்தில் விசா­ரணை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள்.


ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் சுயா­தீன விசா­ரணை ஆணைக்­கு­ழுக்­களின் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதால் தெரிவு செய்­யப்­பட்ட தக­வல்கள் மாத்­தி­ரமே குறிப்­பிட முடியும். இத­ன­டிப்­ப­டையில் 80 சத­வீ­த­மான விசா­ரணை நட­வ­டிக்­கைகள் முழு­மை­யாக நிறைவு பெற்­றுள்­ளன என்றார்.

(இராஜதுரை ஹஷான்) Metro

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணைகளில் 80% நிறைவு பெற்றுவிட்டன. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணைகளில் 80% நிறைவு பெற்றுவிட்டன. Reviewed by Madawala News on February 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.