மீன் பிடிக்க சென்ற முஹம்மட் இக்ரம் (31) என்பவரை காணவில்லை.


எஸ்.எம்.எம்.முர்ஷித்.
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று 
(19.02.2020) புதன்கிழமை மதியம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்து ஒருவர் விழுந்து காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் வாழைச்சேனை துறைமுக கடற்படையினர் தெரிவித்தனர்.


இன்று புதன்கிழமை (19.02.2020) மதியம் வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்படிப்பதற்காக சென்ற படகு வாழைச்சேனையில் இருந்து பணிரெண்டு கிலோ மீற்றர் தூரத்தில் படகில் இருந்த ஒருவர் தவருதலாக கடலில் விழுந்ததாகவும் அவரை தேடும் பணியில் குறித்த நபர் சென்ற படகும் மற்றும் துறைமுகத்தில் இருந்து சென்ற படகுமாக இரண்டு படகுகள் கடற்படையினரின் உதவியுடன் தேடிவருவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.


இன்று மதியம் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மாவடிச்சேனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பௌசுல் முஹம்மட் இக்ரம் (வயது – 31) என்பவரும் அவரது தந்தையும் மற்றுமொருவருமாக மூன்று பேர் சென்ற நிலையிலயே பௌசுல் முஹம்மட் இக்ரம் என்பவரே கடலில் தவருதலாக விழுந்து காணாமல் போயுள்ளவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.


(எஸ்.எம்.எம்.முர்ஷித் )

 
மீன் பிடிக்க சென்ற முஹம்மட் இக்ரம் (31) என்பவரை காணவில்லை. மீன் பிடிக்க சென்ற முஹம்மட் இக்ரம் (31) என்பவரை காணவில்லை. Reviewed by Madawala News on February 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.