கொரோனா வைரஸ் தாக்கம்.. நேற்று மட்டும் 242 பேர் உயிரிழப்பு. மொத்தம் 1355 பேர் இதுவரை பலி


சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் 
எனும் கொவிட் 19 வைரஸினால் நேற்று மாத்திரம் 242 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வைரஸினால் ஒரே நாளில் உயிரிழந்தோரின் மிக அதிக எண்ணிக்கை இதுவாகும்.


இதனால். குறிப்பிட்ட மாகாணத்தில் கொவிட் வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,310 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.


நேற்று  ஹுபேய் மாகாணத்தில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 14,840 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மொத்த உயிரிழப்பு 1355.

இதனால், ஹுபேய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் எனும் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 48206 ஆக அதிகரித்துள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம்.. நேற்று மட்டும் 242 பேர் உயிரிழப்பு. மொத்தம் 1355 பேர் இதுவரை பலி கொரோனா வைரஸ் தாக்கம்.. நேற்று மட்டும் 242 பேர் உயிரிழப்பு. மொத்தம் 1355 பேர் இதுவரை பலி Reviewed by Madawala News on February 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.