மூதூரின் முத்தான
முன்மாதிரி முஸ்லிம் பெண் முஸாதிகாவும் அவள் வாப்பாவும், !!!!
முன்மாதிரி முஸ்லிம் பெண்
முஸாதிகாவே ... என் முதல் வாழ்த்தும் பிரார்த்தனையும்
உனக்கல்ல உன் வாப்பாவுக்கே !
கலர்கலரான கல் வீடுகளை வண்ணவண்ணமாய் வடிவமைத்திட ,
தன் குடிசைக்குள்ளிருந்து கல் வெட்டித் தந்தவர் உன் வாப்பா !
தன் உழைப்பையும் வியர்வையையும் களைப்பையும்
ஒன்றாய் பிசைந்து அம்மாடங்களை வடிவமைத்திட
கல்வெட்டித் தந்தவர் உன்வாப்பா !
தான் ஒன்றும் கையாலாகாதவன் அல்ல என்று
எம் சமூகத்தை தன் கையால் செதுக்கி காட்டியவர் உன் வாப்பா !
உன் போன்ற முசாதிகாகளை ஏறெடுத்தும் பார்த்திராத
எம் சமூகத்து “பெரியோர்களையும் “ கற்றோர்களையும் , மற்றோர்களையும்
உன்மூலமாக ஒரேயடியாக திரும்பிப் பார்க்கச் செய்த ஒரு மகான் உன் வாப்பா !
எம் சமூகத்து “பெரியோர்களையும் “ கற்றோர்களையும் , மற்றோர்களையும்
ஓரணியில் வரிசையாய் நிற்கவைத்து புள்ளியிடச் சொன்னால்
நிச்சயமாய் உன் வாப்பாவுக்கே கூடுதல் புள்ளி.
மூதூரின் முத்தானவளே முஸாதிகாவே !
ஆரவாரமின்றி உன் வாப்பா செய்த அறப்போராட்டத்தின் வெற்றிக் கேடயம் நீ .
குடிசைக்குள் குடிகொண்டு
குப்பி விலக்கொளியினூடாக சூரிய வெளிச்சத்தை கொண்டுவந்தவள் நீ .
குப்பி விலக்கினூடாக நம் சமூகத்தின் விடியலுக்கான வெளிச்சத்தை
நீ தேடிக்கொண்டிருக்கும் போது ,
உன் வயதொத்த பல பாதிமாக்களும் ஆயிஷாக்களும் தாம் “ கைபிடித்த “
செல்போன்களின் வெளிச்சத்தினூடாக எம் சமூகத்தின் எதிர்காலத்தை
இருட்டாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் .
ஒரு பெறுபேற்றினூடாக
உன் ஊருக்கும் எம் சமூகத்திற்கும் நம் நாட்டிற்கும்
பல்லாயிரம் கதைகளை சொல்லித் தந்த நீ
நாளை ஒரு மருத்துவச்சியாய் மலர்ந்து வந்து
மருந்து கட்ட வேண்டும் நம் சமூகத்தின் எழுச்சிக்காக .
ஏ எம் எம் முஸம்மில் – பதுளை.
மூதூரின் முத்தான முன்மாதிரி முஸ்லிம் பெண் முஸாதிகாவும் அவள் வாப்பாவும், !!!!
Reviewed by Madawala News
on
January 28, 2020
Rating: