தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – அமைச்சரவை தீர்மானம்



தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள அமைச்சரவை
இன்று தீர்மானித்தது. இதற்கான நிதியை உடனடியாக ஒதுக்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாக அமைச்சரவையில் தெரிவித்தனர்.

இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.இதற்கான அறிவிப்பை அரசு நாளை உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.அதேசமயம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி இதனை அறிவிக்கவுள்ளார்.

இதேவேளை 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் கூடிய தொழில்வாய்ப்பை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.மார்ச் முதல்வாரத்தில் இதற்கான விண்ணப்பங்களை கோர இறுதி செய்யப்பட்டுள்ளது.
Siva Ramasamy 
தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – அமைச்சரவை தீர்மானம்  தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – அமைச்சரவை தீர்மானம் Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.