சஜித்துக்கு கட்சித் தலைமைத்துவத்தினை வழங்குவதற்கு நவீன் திசாநாயக்க தயா கமகே வஜிர அபேகுனவர்தன உள்ளிட்ட சிலர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற கட்சி உயர்மட்ட கூட்டம் அமளியில் முடிந்த நிலையில் எதிர்வரும் வியாழன் கட்சி உயர்மட்ட மீண்டும் கூட உள்ளது.
கடந்த காலங்களில் கட்சித் தலைவரை வெளியில் விமர்சித்த பலர் அவரை நேரில் சந்திக்கும் போது பொட்டிப்பாம்பாக அடங்கி போயினர். ஆனால் தற்போது ரனில் விக்ரமசிங்கவை அவரது முகத்தில் எதிர்ப்பு வெளியிடும் அளவு பல உறுப்பினர்கள் செயற்படுவதாக கூறப்பட்டது.
கட்சி பிளவு பட்டாலும் சஜித்துக்கு தலைமையை வழங்காமல் இருக்க ரனில் ஆதரவு அணி தீர்மானித்துள்ள அதேவேளை தலைமையை வழங்காவிட்டால் தனியாக பிரிந்து செல்ல சஜித் அணி தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 16’ ம் திகதி தலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் சஜித்துக்கு தலைமை பதவி வழங்கப்படும் எனவும் ஐக்கிய தேசிய கட்சி பா உறுப்பினர் ஒருவர் மடவளை நியுசுக்கு தெரிவித்த அதேவேளை கட்சி தலைமையை வழங்காவிட்டால் கட்சித் தலைமைக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.