இறுதி யுத்ததிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை. துப்பாக்கிதான் இருந்தது.


-பாறுக் ஷிஹான்-
2009ம் ஆண்டிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை   இருக்கவில்லை துப்பாக்கிதான்
இருந்தது. தமிழ் மக்களுக்கு ,தமிழ் இளைஞர்களுக்கு பிரச்சனை இருக்கிறது அது எமக்கு தெரியும் வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.

 வன ஜீவராசிகள் இராஜங்க அமைச்சராக பதவியேற்ற விமல வீர திஸ்ஸநாயக்க  அவர்களை வரவேற்கும் நிகழ்வு  திங்கட்கிழமை    (6) மாலை   கல்முனை பிரதேசத்தில்  அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ் பிரதேசங்களின் அமைப்பாளர் சி. சாந்தலிங்கம் மற்றும் கல்முனை பிராந்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  இளைஞரணி அமைப்பாளர் ஜெ.கிஷாந்தன்,ரஜீவன் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் அவர் உரையாற்றுகையில்

 தமிழ் ,முஸ்லிம் மக்கள்  தங்கள்  தலைவர்களின் கதையை கேட்டு அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு வாக்களித்தனர். இது முதல் தடவையல்ல .  யார் ?இந்த அன்னம் சின்னதில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ  அவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாஸ தமிழ் இளைஞர்களுடன் சண்டையிட பூவை கொடுக்க வில்லை ஆயுதத்தைதான் கொடுத்தார். அவருடைய மகனுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க அறிவில்லையா என சாடினார்.


தமிழ் இளைஞர்களை போன்றுதான்  ஜெ. ஆர் . ஜெயவர்தனா , ரணசிங்க பிரேமதாஸ , சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சி காலத்தில் சிங்கள இளைஞர்களும் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் இதனால் அறுபது ஆயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள  இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து நீங்கள் பெற்ற பயன் என்ன? நான் கிழக்கு மாகாண சபையில் கல்வியமைச்சராக இருந்த வேளை மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று கொடுத்திருக்கிறேன் . மகிந்த ராஜபக்ச சனாதிபதியாக இருந்த கால கட்டதில் கிழக்கு மாகாணத்தில் சேதமடைந்திருந்த பாடசாலைகளை திருத்தியமைத்து கொடுத்திருந்ததை மறந்துவிட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழர்கள் பெருவாரியாக வாக்களித்திருந்தனர்.

சனாதிபதியை கொண்டு வந்தவர்கள் சிங்கள மக்கள் ஆனால் இப்போது தமிழர்களும் முஸ்லிம்களுன் வேலைவாய்ப்பு தாருங்கள், அபிவிருத்தி செய்து தாருங்கள் என்று இப்போது எம்மிடம் வருகிறார்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எமக்கு வாக்களித்துவிட்டு வாருங்கள் அனைத்தையும் பெற்று தருவோம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டி.வீரசிங்க,அம்பாறை நகர முதல்வர், பொதுஜன பெரமுனவின் பிரதேச அமைப்பாளர்கள்,பொதுமக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இறுதி யுத்ததிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை. துப்பாக்கிதான் இருந்தது. இறுதி யுத்ததிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை. துப்பாக்கிதான் இருந்தது. Reviewed by Madawala News on January 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.