ராமநாயக்க கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை கைது செய்ய கங்கொடவில நீதவான் நீதிமன்றம் இன்று மாலை உத்தரவிட்டது.
நீதிபதிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட மா அதிபர் ,கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளரை முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.
அதன் அடிப்படையில் இந்த கைது நடந்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது
Reviewed by Madawala News
on
January 14, 2020
Rating: