உலக நாடுகளில் வெகு விரைவாய் பரவிச் செல்லும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக
அணியப்படும் முகக் கவசத்துக்கு நாடுபூராகவும் பாரிய தட்டுபாடு ஏற்பட்டுள்ளதுடன் இவை அதிக விலைக்கு விற்கப்படுபவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, முகக் கவசத்துக்கு அதிகம் கேள்வி நிலவும் நிலையில் தம்மிடம் இருந்த தொகைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக தம்புளை, அதனை அண்மித்த நகரங்களிலுள்ள ஒசுசல நிலையங்களின் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சீகிரியா, தம்புளை, ஹபரனை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக் கவசத்தை கொள்வனவு செய்ய வருவதுடன், இதனைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றலாப் பயணிகளுக்கு தேவையான முகக் கவசத்தைப் பெற்றுக்கொள்ள முடியாததால், அவர்கள் இலங்கைத் தொடர்பில் விரக்தியுடன் காணப்படுவாக சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.
முகக் கவசத்துக்கு நாடுபூராகவும் பாரிய தட்டுபாடு .. அதிக விலைக்கு விற்கப்படுபவதாகவும் முறைப்பாடு.
Reviewed by Madawala News
on
January 28, 2020
Rating: