சிறுத்தை ஒன்று இறந்து கிடந்த நிலையில் மீட்பு.


மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதான பாதையில் இன்று (28.01.2020) காலை 6 மணியளவில் இறந்த நிலையில்
சிறுத்தையின் சடலத்தை கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவத்ததாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும், 3 அடி நீளமும் 2 அடி உயரமுடைய சிறுத்தை இறந்து கிடந்த  இடத்திற்கு வனத்துறையினருடன் மஸ்கெலியா பொலிஸார் சென்று அச்சிறுத்தையின் சடலத்தை வனத்துறையினருக்கு ஒப்படைத்ததுள்ளனர்.


குறித்த சிறுத்தை உயிரிழந்தமை தொடர்பாக வன ஜீவராசிகள் அதிகாரிகள் பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிறுத்தையின் சடலத்தை கண்ட அப்பகுதி மக்கள் இச்சிறுத்தை போன்று மேலும் பல சிறுத்தைகள் இருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் ஆகவே வன ஜீவராசி அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
சிறுத்தை ஒன்று இறந்து கிடந்த நிலையில் மீட்பு. சிறுத்தை ஒன்று இறந்து கிடந்த  நிலையில் மீட்பு. Reviewed by Madawala News on January 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.