இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்
ஆலோசனைக்கு அமைய, தேசிய செயற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாட்டுக் குழு இன்று (27) மாலை 5.00 மணிக்கு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் கூடவுள்ளது.
இந்த தேசிய செயற்பாட்டுக்குழு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் செயலாளர் ஹந்துனி ஜயரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ, மேலதிக செயலாளர்களான சுனில் டி அல்விஸ், லக்ஷ்மி சோமதுங்க, நிஹால் ஜயதிலக, விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய ஆகியோரை உள்ளக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய, கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக செயற்பாட்டுக்குழு.
Reviewed by Madawala News
on
January 27, 2020
Rating: