-பாறுக் ஷிஹான்-
தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகையை நாளைய தினம் கொண்டாடுவதற்குஅம்பாறை மாவட்ட மக்கள் பல்வேறு வகையிலும் தயாராகி வருகின்றனர்.
கல்முனை பாண்டிருப்பு உள்ளிட்ட சந்தை பகுதியில் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதோடு புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதலாவது தைப்பொங்கல் பண்டிகை மக்கள் மகிழ்ச்சியாக பொங்கலைக் கொண்டாடுவதற்கு தயாராகி வருவதை காணக்கூடியதாக உள்ளது.
நாட்டின் பலபாகங்களிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாபாரங்கள் களைகட்டியுள்ளதுடன் தமிழ் மக்கள் அனைவரும் பண்டிகையை கொண்டாடத் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொங்கலை கொண்டாட தயாராகும் அம்பாறை தமிழ் மக்கள்.
Reviewed by Madawala News
on
January 14, 2020
Rating: