மாத்தறையில் “ஆணொருவர்” குழந்தை பிரசவித்ததாக வெளியான செய்தி தொடர்பில்...


வயிற்றுவலி காரணமாக நேற்று அதிகாலை மாத்தறை 
பெரியாஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்ட “ஆணொருவர்” குழந்தை பிரசவித்ததாக வெளியான வினோத தகவல் சமூக வலைகளில் பலரின் பேசுபொருளாக மாறியுள்ளது.


நேற்று காலை தனது அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் சகிதம் மாத்தறை வைத்தியசாலைக்கு சென்ற ஆணொருவர் தனக்கு வயிற்றில் வலி இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க மருத்துவர்கள் தீர்மானித்தனர்.


வயிற்றுவலி அதிகமானதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஆண் போல நடித்த பெண் என்பதை கண்டறிந்து அவரை பிரசவ விடுதிக்கு அனுப்பினர் .

இதனையடுத்து ஆண்குழந்தை ஒன்று அவருக்கு பிறந்துள்ளது.


26 வயதுடைய தெவிநுவர பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு ஆண் போல வேடமிட்டு வந்தவரென்றும் நீண்ட நாள் இவர் அப்பகுதியில் ஓட்டோ சாரதியாக தொழில் செய்து வந்தவரென்றும் தெரியவந்துள்ளது.

சிவா ராமசாமி
மாத்தறையில் “ஆணொருவர்” குழந்தை பிரசவித்ததாக வெளியான செய்தி தொடர்பில்... மாத்தறையில்   “ஆணொருவர்” குழந்தை பிரசவித்ததாக வெளியான செய்தி தொடர்பில்... Reviewed by Madawala News on January 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.