கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனப் பெண், மாத்தளை பிரதேசத்தில் உணவு வாங்கியதால் அப்பிரதேசத்தில் கூடுதல் அவதானம்.


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவரென அடையாளங் காணப்பட்டுள்ள சீனப் பெண்,
மாத்தளை- கவுடுபெலல்ல பிரதேச ஓட்டலொன்றில் உணவு வாங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளதுடன், குறித்த ​ஹோட்டல், அதனை அண்மித்த பிரதேசங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த ஹோட்டலின் பணியாளர்கள், பிரதேசவாசிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாத்தளை பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் சேபாலி விக்ரமதிலக தெரிவித்தார்.

மேலும் மாத்தளை- கவுடுபெலல்ல பிரதேசத்தில் ​தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர், சுகாதார சேவை அதிகாரிகள் பரிசோதனைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை, தம்புளை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளின் வைத்தியசாலை செயற்குழுவினரைத்  தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனப் பெண், மாத்தளை பிரதேசத்தில் உணவு வாங்கியதால் அப்பிரதேசத்தில் கூடுதல் அவதானம். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனப் பெண், மாத்தளை பிரதேசத்தில் உணவு வாங்கியதால் அப்பிரதேசத்தில் கூடுதல் அவதானம். Reviewed by Madawala News on January 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.